அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்தில் வெற்றிபெற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர்களின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.
அத்துடன், முதலாம் பிரிவில் ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை ரக்பி அணியும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் கௌரவிக்கப்பட்டது.