free website hit counter

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு படகு மூலம் செல்லும் மக்கள்.

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் பாதிப்புற்ற தமிழ் மக்கள், தலைமன்னாரில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற பத்துப் பேரை, தமிழக கரையோரக் காவல்துறையினர் கைது செய்து, ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜர் செய்தனர். இவர்கள் அனைவரையும், மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையின் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் இவர்கள் எனவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்த காலப்பகுதியில், உயிரச்சம் காரணமாக அகதிகளாகத் தமிழகத்திற்கு மக்கள் தப்பிச்சென்றிருந்த நிலை, மீண்டும் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction