free website hit counter

இலங்கையில் இந்திய இராணுவம் ? - இந்தியா மறுப்பு !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் அமைதிநிலையைத் தோற்றுவிக்க இந்திய இராணுவம் அனுப்பட்டுள்ளதான செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

முன்னதாக இந்திய அரசியல் முக்கியஸ்தர் சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு இந்திய இராணுவத்தினை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையில், கொழும்பில் இந்திய இராணுவம் தரையிறங்கியுள்ளதான போலித் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக அறியவருகிறது. அத்துடன் இலங்கையின் முக்கிய அரசியற் பிரமுகர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாவும், தகவல்கள் சில சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இந்த இரு செய்திகளையும்  இந்திய உயர்தானிகம் மறுத்துள்ளதுடன், தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பொன்றினையும் வெளியிட்டுள்ளது.

பாஜகவினைச் சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி, மஹிந்தராஜபக்ஸ குடும்பத்தினருடன் நெருக்கமான உறவுகளைப் பேணியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணிய சுவாமியின் கூற்றுக்கு, இலங்கை தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த மனோ கணேசன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction