free website hit counter

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணிகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் புதிய பிரதமராக நேற்றை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தனது பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையின் 26 ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆறாவது முறையாக பிரதமராக பதவி வகிக்கின்றார். இதன் மூலம் இலங்கையில் அதிக முறை பிரமராகப் பதவி வகித்த பெருமையும், தேர்தலில் பெரும் தோல்வியுற்று, ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரை மட்டும் கொண்ட அரசியல் கட்சித் தலைவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை குறைந்த உறுப்பினர்களுடன் உருவாகலாம் எனவும், 15 பேருடன் மட்டுப்படுத்த அமைச்சரவையாக உருவாக்கவும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களைத் தவிர்த்து, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியதாக அமைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியவருகிறது.

புதிய பிரதமரின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வு பெற்ற அதிகாரியான, சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டது தொடர்பில் கடும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. இது ஒரு மாளிகை சூழ்ச்சி எனவும், நாட்டின் பிரச்சினைக்கு இது ஒருபோதும் தீர்வாகாது எனவும், ராஜபக்ஷர்களை காப்பாற்றவே ரணில் அதிகாரத்தை பெற்றுக்கொள்கின்றார் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction