இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான ‘IRIS Bushehr’ இன் மொத்தம் 204 பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து மீட்கப்பட்ட பணியாளர்கள் பின்னர் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேற்று (5) சம்பவம் குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இந்தக் கப்பலில் மொத்தம் 208 பணியாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் வெலிசரா கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி, அவர்களின் பதிவு, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உணவு வழங்கல் ஆகியவை வெலிசரா கடற்படைத் தளத்தில் வசதி செய்யப்படும்.
