முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற புத்தகத்தை நாளை வெளியிடவுள்ளார்.
சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் தனது நேரடி அனுபவத்தை இந்த புத்தகம் ஆராய்வதாக முன்னாள் ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நூல் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் முக்கியமானதென நான் நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னணி புத்தகக் கடைகளில் இருந்து இந்த புத்தகம் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் கிடைக்கும் என்றார்.