free website hit counter

Sidebar

21
, ஜூன்
35 New Articles

அவசரகால மருந்து கொள்வனவை மட்டுப்படுத்த தீர்மானம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மருந்துகளின் அவசர கொள்வனவை மட்டுப்படுத்த தீர்மானம்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) நிபுணர் குழுவின் பரிந்துரை எதிர்காலத்தில் எந்தவொரு அவசரகால மருந்துக் கொள்வனவுகளுக்கும் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அவசரகால கொள்முதலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்த்தர்களினால் மாத்திரமே மருந்துகள் கொள்வனவு செய்யப்படும்.

மேலும், குறிப்பிட்ட விநியோகஸ்த்தர்கள் சில மருந்துகளை வழங்க முன்வருவதில்லை என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அத்தகைய சந்தர்ப்பத்தில், பொருத்தமான மருந்துகள் இந்திய அரசாங்க முகவர் மூலமாக கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula