free website hit counter

இலங்கை மேல் மாகாணத்திற்குப் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு, தற்பேபாது நாடு முழுவதற்குமாகப்  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிந்தைய தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்கள் கலவரபூமியாக மாறின.

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அலரிமாளினை முன்பாக பிரதமருக்கு ஆதரவாகவும், எதிராவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று, ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், இன்று நாடாளவிய ரீதியில் ஹர்த்தால், மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP சேவைகளை நிறுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மலையகத்தில் நேற்று நடைபெற்ற மேதின நிகழ்வில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.அண்ணாமலை, இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …