free website hit counter

‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  விடுதியில் அதிமுக எம்.ஏல்.ஏக்கள் அனைவரின் கடிதங்களையும் சசிகலா வாங்கிக்கொண்டபிறகு, முதலமைச்சர் பதவியை முதலில் இன்றைய தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கே கொடுக்க விரும்பினாராம் சசிகலா.

பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 388 தனி நபர்களுக்கு எதிரான தடையை இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தனிநபர்களுக்கு எதிரான தடையை அரசாங்கம் விதித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில், புதிய பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் இறுதி நேரம் வரையில் ஈடுபட்டது. ஆனாலும், 46/1 என அடையாளப்படுத்தப்படும் புதிய பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியிருக்கின்றது. 

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில், சர்வதேச குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்; அதற்கு உதவும் வகையில் சர்வதேச பக்கச்சார்பற்ற சுயாதீன பொறிமுறை (International, Impartial and Independent Mechanism- IIIM) உருவாக்கப்பட வேண்டும்; இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்; வடக்கு - கிழக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அம்பிகை என்கிற அம்மையார், பிரித்தானியாவில் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம், 17 நாட்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமை (15) முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் களம் ‘ஜெனீவா அரங்கினை’ ஒவ்வொரு வருடமும் திறக்கும். அந்த அரங்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது பல்வேறு அரங்காற்றுகைகளோடு நிறைந்திருக்கும். தொடர்ச்சியாக பலிவாங்கப்படும் ஒரு சமூகமாக தமிழ் மக்கள் நீதிக் கோரிக்கைகளோடு சர்வதேசத்தை நாடுவது ஒன்றும் தவறில்லை. அதுவும், ஈழத் தமிழர்களின் விவகாரம் மற்றும் சர்வதேச ஊடாடல் என்பது பெரும்பாலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் சுருக்கப்பட்ட நிலையில், ஜெனீவா அரங்கு மேலெழுவது இயல்பானதுதான். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றை கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. ராஜபக்ஷக்கள் மீண்டும் பதவியேற்றதும், ஏற்கனவே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகிவிட்டது. அப்படியான நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், புதிய தீர்மானம் தொடர்பிலான ஆரம்ப வரைபு (Zero Draft) இலங்கைக்கு எந்தவித நெருக்கடிகளையும் வழங்காத ஒரு சூனியமான வரைபாகவே வெளிவந்திருக்கின்றது. 

new-year-prediction