மாதவிடாய் காரணமாக, தங்களால் பணியை இடையூறு இன்றி பெண்களால் செய்ய முடியவில்லை. இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது என்பதற்காகக் கருப்பையையே அகற்றி விடுவதாக அதிர்ச்சித் தகவல்கள் செய்திகளாக வெளியாக மகாராஷ்டிர மாநிலத்தின் மகளிர் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இளைஞர்களை திட்டமிட்டுப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)
தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசியக் கட்சிகள் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்கு பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில் தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, எனக்கு இதற்கான பதில்களை பேச வேண்டியிருந்தது.
என்னவாகப் போகிறார் எடப்பாடி
‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விடுதியில் அதிமுக எம்.ஏல்.ஏக்கள் அனைவரின் கடிதங்களையும் சசிகலா வாங்கிக்கொண்டபிறகு, முதலமைச்சர் பதவியை முதலில் இன்றைய தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கே கொடுக்க விரும்பினாராம் சசிகலா.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை சொல்லும் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்)
பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 388 தனி நபர்களுக்கு எதிரான தடையை இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தனிநபர்களுக்கு எதிரான தடையை அரசாங்கம் விதித்துள்ளது.
ஜெனீவா பிரேரணை; கடலில் தத்தளிப்பவனுக்கான ஒரு மரக்கட்டை! (புருஜோத்தமன் தங்கமயில்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில், புதிய பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் இறுதி நேரம் வரையில் ஈடுபட்டது. ஆனாலும், 46/1 என அடையாளப்படுத்தப்படும் புதிய பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியிருக்கின்றது.
அம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில், சர்வதேச குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்; அதற்கு உதவும் வகையில் சர்வதேச பக்கச்சார்பற்ற சுயாதீன பொறிமுறை (International, Impartial and Independent Mechanism- IIIM) உருவாக்கப்பட வேண்டும்; இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்; வடக்கு - கிழக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அம்பிகை என்கிற அம்மையார், பிரித்தானியாவில் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம், 17 நாட்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமை (15) முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஜெனீவா அரங்காற்றுகையும் முகத்தில் அறையும் உண்மையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் களம் ‘ஜெனீவா அரங்கினை’ ஒவ்வொரு வருடமும் திறக்கும். அந்த அரங்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது பல்வேறு அரங்காற்றுகைகளோடு நிறைந்திருக்கும். தொடர்ச்சியாக பலிவாங்கப்படும் ஒரு சமூகமாக தமிழ் மக்கள் நீதிக் கோரிக்கைகளோடு சர்வதேசத்தை நாடுவது ஒன்றும் தவறில்லை. அதுவும், ஈழத் தமிழர்களின் விவகாரம் மற்றும் சர்வதேச ஊடாடல் என்பது பெரும்பாலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் சுருக்கப்பட்ட நிலையில், ஜெனீவா அரங்கு மேலெழுவது இயல்பானதுதான்.