free website hit counter

பழனிமலையில் மகாகும்பாபிஷேகம் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனிமலையில் இன்று காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

போகரின் தவவலிமையினால், அற்புத ஆற்றல்மிகு நவபாஷண விக்கிரமாக கருவறையில் பிரதிஷ்டைசெயயப்பெற்ற பழனிமலை அருள்மிகு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் 16 ஆண்டுகளின் பின்னதாக இன்று காலை மிகச் சிறப்பாக நிகழ்ந்தேறியது.

சிவாச்சார்யர்களின் வேத கோஷங்களும், துவார்களின் தமிழ்மறையும் இணைந்தொலிக்க, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் மதிப்புக்குரிய சேகர்பாபு அவர்கள் கொடியசைத்து வைக்க, வானிலிருந்து ஹெலிகாப்டர் வழியாக பூமாரி பொழிய, ஒரே நேரத்தில் விமானங்களுகும் மூர்த்திகளுக்கும் ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction