free website hit counter

கோட்டா – ரணில் இன்று சந்திப்பு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. 

இருவரும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நேற்று தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர். அதனடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தை மரணமடைந்துள்ளார். அவரது இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்ரமசிங்க கொழும்பிலிருந்து இன்று காலை குருநாகல் சென்றுள்ளார். அவர் கொழும்பு திரும்பியவுடன் இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction