free website hit counter

சம்பளம் வழங்க டொலர் இல்லாத காரணத்தினால் இலங்கை தூதரகங்கள் மூடல்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை காரணம் காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்
. அதன்படி ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடியுள்ளது.

இந்த நிலையில் சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான இலங்கையிர்கள் வாழ்கிறார்கள் என தெரிவித்த அவர்,  இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாகஅவர் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே லக்ஸமன் கிரியெல்ல இதனை தெரிவித்தார்.  

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction