free website hit counter

இத்தாலி தென்னாபிரிக்கப் பயணிகளுக்குத் தடை விதித்தது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் அச்சங்கள் காரணமாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணத்தைத் தடையை இத்தாலி அறிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த அச்சம் காரணமாக கடந்த பதினைந்து நாட்களில் தென்னாப்பிரிக்காவில் இருந்தவர்களுக்கு இத்தாலிக்குள் நுழைவதைத் தடை செய்வதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தத் தடை பொருந்தும். கோவிட் வைரஸின் புதிய B.1.1.529 மாறுபாட்டை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக, இத்தாலியின் சுகாதார அமைச்சர் Roberto Speranza கூறினார். இதேவேளை நாங்கள் அதிகபட்ச எச்சரிக்கையின் வழி இந்த தடையினை விதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியுடன், ஜேர்மனும், பிரிட்டனும், இன்று வெள்ளிக்கிழமை முதல் இந்தத் தடையினை அறிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளுடன் புதிய கோவிட் -19 மாறுபாடு பரவுவதைத் தடுக்கும் எச்சரிக்கைகாரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணத்தைத் தடைசெய்யும் திட்டத்தைத் தனித்தனியாக முன்மொழிந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகி "பி.1.1.529 என்ற கவலையின் மாறுபாட்டின் காரணமாக தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து விமானப் பயணத்தை நிறுத்த அவசரகால தடையினைச் செயல்படுத்த உறுப்பு நாடுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பினை முன்மொழிவார்" என்று EU தலைவர் Ursula Von der Leyen வெள்ளிக்கிழமை தனது ட்வீட் டர் குறிப்பில் தெரிவித்தார்.

இதனைத் தொடரந்து , ரோமில், கடந்த பதினைந்து நாட்களில் தென்னாப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா அல்லது ஈஸ்வதினி ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு நுழைவதைத் தடை செய்வதாக அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

வெள்ளிக்கிழமை 1200 GMT முதல் தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து அனைத்து விமானங்களும் தடைசெய்யப்படும் என்று பிரிட்டனும் அறிவித்தது.

இது இவ்வாறிருக்க, இத்தாலியின் சில பகுதிகள் 'மஞ்சள்' மண்டலத்திற்கு திரும்புவதை எதிர்கொள்வதால், இத்தாலி கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது.

டிசம்பர் 6 முதல் நடைமுறைக்கு வரும் அரசாங்க ஆணை, இத்தாலியில் அதிகரித்து வரும் தொற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்யவும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்கள் மற்றும் சேவைகளை அணுகுவதற்கு ‘சூப்பர் கிரீன் பாஸ்’ சுகாதாரச் சான்றிதழ் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சென்ற திங்கள்கிழமை மாலை ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இத்தாலியின் பிரதம மந்திரி மரியோ டிராகி, இந்த கட்டுப்பாடுகள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு "சாதாரண" கிறிஸ்துமஸைக் கொண்டாட உறுதியளிக்கும்" என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction