free website hit counter

டோக்கியோ பாராஒலிம்பிக் : வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாபென் பட்டேல்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. 5-வது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல் சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார். இதில் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவை; பவினாபென் பட்டேல் வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். இதனால் பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெறுமை 34 வயதான பவினாபென் பட்டேல் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இன்றைய இறுதிபோட்டி ஆட்டத்தில் பவினா உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 3-0 என்ற செட் கணக்க்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதனால் பவினா வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவரது வெற்றிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction