free website hit counter

உத்தர பிரதேச முதல் மந்திரி டெல்லியில் சுற்றுப்பயணம் : பிரதமருடன் சந்திப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இரு நாள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு நேற்று சென்றுள்ளார்.

இதன்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று காலை முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சென்று சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பிற்கு பின் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேச இருக்கிறார்.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலைவர்களை சந்தித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction