free website hit counter

மழை நேரத்தில் படத்தை அறிவித்த விஜய் ஆண்டனி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியிலும் பாராட்டுக்களை குவித்தது. வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் மிகச்சிறப்பான திரைக்கதைக்காகவும் விருதுகளும் பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விஜய் ஆண்டனியின் நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற தலைப்பில் உருவாகிறது. இந்தப் இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். ஆக்ஷன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இதை, முதல் முறையாக தாமன், தியூ பகுதியில் படமாக்கபட இருப்பதாகக் கூறுகிறார். சென்னையில் படமாக்கவேண்டிய காட்சிகளை ஏற்கனவே படம் பிடித்துவிட்டதாகவும் 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், படத்தை தலைப்பில் மழை இருப்பதால் இதை இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் அறிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் விஜய் ஆண்டனி நம்பிடம் கூறினார்.

இப்படத்தில் தன் அழகால் தமிழ் ரசிகர்களை வசியப்படுத்திவரும் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார். கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார்.

விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டன் திரைப்படங்களில் எப்போதும் ஒரு பொதுவான அம்சம் இருக்கும், வித்தியாசமான கதைக்களம் மற்றும் மனதைக் கவரும் ஆக்சன் காட்சிகள் இவர்கள் படத்தில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த இரண்டு அம்சங்களுடன், மழை பிடிக்காத மனிதன் படத்தில், பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகளோடு ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது படக்குழு. தான் நடிக்கும் படங்களில் எப்போதும் குறைந்த வசனங்கள் கொண்ட கதாபாத்திரத்தில், தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, அசத்தி வருகிறார் பன்முக கலைஞரான விஜய் ஆண்டனி. எப்போதும் நம்பிக்கையூட்டும் கதைக்களங்களுடன் வரும் விஜய் மில்டன், கதாநாயகனின் வாழ்க்கையில் பத்து அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை, மழை பிடிக்காத மனிதன் படத்தில் உருவாக்கியுள்ளார். இந்தத் தலைப்பு வந்தவுடனேயே, மழை பிடிக்காத மனிதன் , சலீம்-2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்குமா என பல கேள்விகள் இயல்பாகவே தோன்றும். அதனை தெளிவுபடுத்தும் விதமாக இந்தப் படம் சலீம் படத்தின் நேரடித் தொடர்கதை என்றும் விஜய் ஆண்டனி தெளிபடுத்தினார்.

இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ‘மழை பிடிக்காத மனிதன் (சலீம்-2) படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction