மலையாளத் திரைப்பிரபலமான நடிகர் மோகன்லால் இந்திய அளவிலும், உலகளவிலும், நன்கு அறியப்பட்ட நடிகர்.அவர் இப்போது படப்பிடிப்பொன்றிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவ்வாறு வருகைதந்துள்ள அவர் நேற்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த அவர் நாடாளுமன்ற பார்வையாளர் அமர்வில் இருந்து, நேற்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் அறிய வருகிறது.
இது தொடர்பான படங்களைத் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட மோகன்லால், "இலங்கை நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பால் மிகவும் கௌரவிக்கப்படுகிறேன். மாண்புமிகு பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன, துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் மற்றும் எனது அன்பு நண்பர் இஷாந்த ரத்நாயக்க ஆகியோரை சந்தித்தது ஒரு உண்மையான பாக்கியம். இலங்கைக்கு இந்த வருகையை உண்மையிலேயே மறக்க முடியாததாக மாற்றிய அரவணைப்பு, தாராள மனப்பான்மை மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." எனவும் குறிப்பிட்டுள்ளார்.