free website hit counter

தடுப்பூசி மூன்றாவது டோஸ் உடலுக்கு ஆபத்து இல்லை - ஜூரிச் பல்கலைக்கழக மருந்தியல் அறிவியல் நிபுணர்

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸுக்கு இடையிலான கால இடைவெளி நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, இது டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மட்டுமல்லாமல், ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராகவும் பாதுகாப்பை கணிசமாக அதிகரிக்கிறது என்பதனை, தடுப்பூசிகளுக்கான ஃபெடரல் கமிஷனின் தலைவரான கிறிஸ்டோப் பெர்கர், வழக்கமான வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு ஒருமுறை பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா? என்று பலர் அஞ்சுகிறார்கள். அவ்வாறு பயப்படத் தேவையில்லை என ஜூரிச் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் அறிவியல் கழகத்தின் தடுப்பூசி நிபுணரும் உதவிப் பேராசிரியருமான கிளாஸ் எயர் கூறுகிறார்.

தடுப்பூசிக்கு வரும்போது உயிரினத்தின் சகிப்புத்தன்மை அளவு உண்மையில் மிக அதிகமாக உள்ளது. அவை உடல் ரீதியான தீங்கு விளைவிக்காத தயாரிப்புகள், ஆனால் வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன அல்லது வலுப்படுத்துகின்றன. பாதுகாப்பை உயர் நிலைக்கு எடுத்துச் செல்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction