free website hit counter

மூன்று புதிய கேப்டன்களை நியமிக்கும் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு?

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவுக்குழு T20, ODI மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு புதிய கெப்டன்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தனஞ்சய டி சில்வாவும், டி20 அணியின் கேப்டனாக 26 வயது ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கவும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி குசால் மெண்டிஸுக்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், டி20 மற்றும் ஒருநாள் அணிகள் இரண்டின் துணை கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2024 இல் ஜிம்பாப்வேயின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக திங்கட்கிழமை (டிசம்பர் 18) நடைபெறும் SLC தேர்வுக் குழு கூட்டத்தில் இது தொடர்புடைய முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction