free website hit counter

ராஜபக்‌ஷவை தெரிவு செய்த இலங்கை பாராளுமன்றம் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பின் பின்னர், பாராளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியுள்ளது. பாராளுமன்றத்தில், நேரத்தை வீணடிக்காமல், பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்தது. எதிர்க்கட்சிகள் பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை முன்மொழிய பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோகினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் , 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகராக அஜிதத் ராஜபக்‌ஷவின் பெயரை பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவித்தார்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction