இலங்கையில் சட்டவிரோதமாகப் பணம் ஈட்டியமை, சொத்துக்களை வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை அறிதல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு (IAID ) விசாரணைகளை, ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த கால அரசாங்கங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த அமைச்சர்கள் என, மொத்தம் 28 அரசியல்வாதிகள் இந்த விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் எனவும் தெரிய வருகிறது.
பல சிங்கள உறுப்பினர்களுடன் , தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களும் இந்த விசாரணைப்பட்டியலில் உள்ளதாகவும், உரிய நேரத்தில், விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.