இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்தியக் கிழக்கின் யுத்த சூழ்நிலைகளால், உலக சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
யுத்தநிலைகளால் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை தளம்பல் நிலையில் இருந்தாலும், மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாகவே எரிபொருளின் விலையில் மாற்றங்கள் இன்று ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் யுத்தச் சூழ்நிலை காரங்களும், இம்முறை மாதாந்த எரிபொருள் விலையில் செல்வாக்குச் செலுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.