free website hit counter

யாழ்ப்பாணத்தில் 234 ஏக்கர் காணி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ்ப்பாணத்தில் பயிர்ச் செய்கைக்காக 408 நபர்களுக்கு இலவசப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, தகுதியுள்ள பொதுமக்களுக்கு 2 மில்லியன் இலவசப் பத்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நோக்குடன் உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக காணி விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று இடம்பெற்ற காணி விநியோகத்தின் ஒரு அங்கமாக யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசம் இருந்த 234 ஏக்கர் காணியை ஜனாதிபதி இன்று விடுவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் ஒட்டகப்புலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 408 நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடையாளமாக வழங்கி வைத்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction