free website hit counter

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கோவிட் மரணம் பதிவாகியுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண் கடந்த வாரம் பிரான்ஸில் இருந்து வந்திருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (12) அவர் உயிரிழந்துள்ளார், இன்று கிடைக்கப்பெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த மரணம் கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHIs) அவரது நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction