free website hit counter

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில், நடத்தப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எவ்வித தடைகள் வந்தாலும், நடத்தப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
எமது ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக சுகாதாரப் பணிப்பாளர் ஊடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருகட்டமாக சுகாதாரப் பணிப்பாளர் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். எனினும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு இடைவெளிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction