free website hit counter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருந்து ரிஷாட் பதியூதீன் விடுதலை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருந்து ரிஷாட் பதியூதீன் விடுவிக்கப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்வதாக நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மீண்டும் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction