சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (29) பிற்பகல் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம் கையளித்துள்ளார்.
அதன்படி, பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் 2024 செப்டெம்பர் 04 ஆம் திகதி வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.
"அனைவருக்கும் வெற்றி" என்ற தலைப்பிலான அறிக்கை, ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது - ஒரு நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளித்தல், அரசாங்க சேவையை மேம்படுத்துதல், வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் தேசத்தைப் பாதுகாத்தல். தமிழ் விஞ்ஞாபனம்