free website hit counter

ராயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவை இலங்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவித்தது.

தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், ராயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட மன்னிப்பையும் செல்லாது என்றது.

2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் காண்டோமினிய வளாகத்தில் இவோன் ஜோன்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு 2012 இல் ஆரம்பத்தில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, கொலைச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction