மாவட்ட அளவில் கோவிட் -19 தடுப்பூசி மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்த வயதினரில் உள்ள முன்னணி சுகாதாரப் பணியாளர்களும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் மற்றவர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் இந்த வயதினரில் குறிப்பிட்ட அளவு இளைஞர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். மொத்த மக்கள்தொகையில் சுமார் 3.7 மில்லியன் மக்கள் 18-30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இந்த வயதினருக்கான தடுப்பூசியை விரைவாக முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் முடிவதற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட தடுப்பூசிகளுக்காகக் காத்திருக்காமல் விரைவாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

