விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இரண்டாம் தவணையை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை இன்னும் கடினமான பயணத்தை எதிர்நோக்கியுள்ளது என வலியுறுத்தினார்.
ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விலக்கு பட்டியலில் இருந்து பொருட்களை அகற்றுவது குறித்த கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
VAT வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிப்பதன் மூலம் ரூ.227 பில்லியன் அரச வருமானம் கிடைக்கும் என அரசு எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (டிச.09) மாலை 5.10 மணியளவில் ஏற்பட்ட திடீர் பாரிய மின்வெட்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) கூறுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.