free website hit counter

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தமது கட்சி இன்னமும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு மாறுபட்டதாக இருப்பதாக கட்சியின் தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 08) அறிவித்தது.

தாதியர் மற்றும் பல சுகாதார சேவை பணியாளர்களின் ஓய்வு வயது 61 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2024 இல் 9.6% அதிகரித்து 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

மன்னார் மற்றும் பூனேரியில் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: