தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30% இற்கும் மேலாக குறைக்கும் என வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
"புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி, NPP அரசாங்கம் நிச்சயமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30% க்கும் அதிகமான மின் கட்டணத்தை குறைக்கும், ”என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். (நியூஸ் வயர்)
