இரான் இஸ்ரேலின் ஒரு வார காலத்திற்கும் மேலான தாக்குதகளில், நேற்றிரவு அதிரடியா நுழைந்தது அமெரிக்கா.
இரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணுசக்தி விவகாரத்தில் இரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான ஒரு முற்றுப் புள்ளி இத் தாக்குதல் எனவும், இது உலகுக்கான வெற்றி எனவும் குறிப்பிட்டார்.
இரான் தாக்குதல்களை நிறுத்தி, உடனடியாக சமாதானத்திற்கு வவரவேண்டும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இத் தாக்குதல்களைத் தொடர்ந்தும் இரான் இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானுக்கு இரு வார காலக்கெடு விதித்திருந்த நிலையில், அமெரிக்க சடுதியாக இத்தாக்குலை நடந்தியுள்ளது.