free website hit counter

சக்தி வாய்ந்த நில நடுக்கம், பல நாடுகளை சுனாமி தாக்கலாம், ஜப்பானுக்கும் எச்சரிக்கை !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று புதன்கிழமை அதிகாலை இரஷ்யாவிற்கு கிழக்கே  8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த மிகப்பெரிய நிலநடுக்கம் வடக்கு பசிபிக் பகுதியில் சுனாமி ஆழிப்பேரலையை  ஏற்படுத்தியுள்ளதுடன் ஹவாயையும் தாக்கியுள்ளதாக அறிய வருகிறது. இச் சுனாமி அலைகள், அலாஸ்காவிற்கும், தெற்கே நியூசிலாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை நோக்கியும்  தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி "கண்காணிப்பு" விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுனாமி அலைகள் இப்போது ஹவாயைத் தாக்கியுள்ளன என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறுகிறது.
ஆயினும், இதுவரை பெரும் பாதிப்பைத் தரும் வகையில் அலைகள் தாக்கவில்லை என்று ஹவாயின் ஆளுநர் தெரிவித்துள்ளார். 

தலைநகர் ஹொனலுலுவின் தாயகமான கவாய் மற்றும் ஓஹு தீவுகளில், சுனாமி தாக்கத்திற்கு முன்பு ஏற்படும்  கடல் உள் வாங்குதலால் நீர் மட்டம் குறைந்ததினால், மக்கள் பொருட்களை சேமித்து வைத்துக்கொண்டு உயரமான இடங்களை அடைய முயன்றதால் சாலைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

ரஷ்யாவின்  கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் நான்கு மீட்டர் (13 அடி) உயர அலைகள் பதிவாகியுள்ளன, இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. பிராந்திய சுகாதார அமைச்சர் ஒலெக் மெல்னிகோவ் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, நில அதிர்வு நிகழ்வின் போது சிலர் காயமடைந்துள்ளனர்

ஜப்பானில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை வதிவிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு நிறுவனத்தின்படி, அலைகள் 3 மீட்டர் உயரத்தை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.இதேபோல்
சீனாவின் சுனாமி எச்சரிக்கை மையம், ஷாங்காய் மற்றும் ஜெஜியாங் மாகாணங்களைச் சுற்றியுள்ள நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்திற்குப் பிறகு பசிபிக் கடற்கரையில் உள்ள ஜப்பானிய அணுமின் நிலையங்கள் எந்த அசாதாரணங்களையும் தெரிவிக்கவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தை இயக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி ஹோல்டிங்ஸ், சுமார் 4,000 தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்து, ஆலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொலைதூரத்தில் கண்காணித்து வருவதாகக் கூறியது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula