free website hit counter

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் இரண்டு பெரிய மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மின்சாரம் இன்றி லெபனான் இருளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது.

தான்சானியா எழுத்தாளர், நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னா 2021 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.

பாகிஸ்தான் ஹர்னாயில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 200 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான நரம்பு ஏற்பிகளை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் ( David Julius) மற்றும் ஆர்டெம் படபூட்டியன் (Ardem Patapoutian) மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய ஷாஹீன் சூறாவளி ஓமன் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது தனது பதவிக் காலம் முடிந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டேர்தே அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …