free website hit counter

வெள்ளிக்கிழமை இரவு, வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தானின் சில பகுதிகளை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதில், ஆப்கானிஸ்தானில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்ததைக் காரணம் காட்டி, பாகிஸ்தான் வியாழக்கிழமை ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் இரண்டாவது முறையாக எரிபொருள் விலையை கடுமையாக உயர்த்தியது.

அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியுள்ளார். புதன்கிழமை பிற்பகல் X தளத்தில் பெஷெஷ்கியனின் எழுதிய அந்தப் பகிரங்கக் கடிதத்தில், தனது நாட்டுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் போருக்கு மத்தியில், "ஈரானை ஒரு அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது, வரலாற்று யதார்த்தத்துடனோ அல்லது தற்போதைய கண்கூடாகத் தெரியும் உண்மைகளுடனோ ஒத்துப்போகவில்லை," என்று  எழுதியுள்ளார்.

ஈரான் போரின் அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா தரைவழிப் படையெடுப்பைத் திட்டமிடுவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அத்தகைய தலையீடு பலவந்தமாக எதிர்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கப் படைகளின் தரைவழிப் படையெடுப்பிற்காக ஈரானிய ஆயுதப் படைகள் காத்திருக்கின்றன என்றும், "அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களின் பிராந்திய கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும்" தயாராக உள்ளன என்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாப் பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை ரஷ்யா கண்காணித்து வருவதாக தனக்கு உளவுத் தகவல் கிடைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பிராந்தியம் முழுவதும் அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் இலக்காக இருக்கும் என்று ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …