பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
தொழில் வருமானம் நன்றாக இருக்கும். சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறு ஏற்படும் கிரக அமைப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.சிலர் அபராதங்கள் கட்ட வேண்டி இருக்கும். தேவையில்லாத வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், எதிலும் நிதானம் தேவை.பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். சிறு விபத்துகள் ஏற்படலாம். குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும்.பிறருடனான வீண் மனஸ்தாபங்களைத் தவிர்கவும்.
பரிகாரம்: சுதர்சனர் சக்கரத்தாழ்வார் வழிபாடு
இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும்.அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு
மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
குடும்ப உறவுகளில் அப்போது சிக்கல்கள் தலை காட்டும். கொடுக்கல் வாங்கல்களில் தகராறுகள் வரலாம். புதியவர்களை நம்பி எந்த பொறுப்பும் ஒப்படைக்க முடியாது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். சிலருக்கு இந்த தொழில் வேண்டாம் வேற தொழில் செய்யலாம் என்கின்ற எண்ணமும் ஏற்படும்.மாணவர்களுக்கு கவனச்சிதறல் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை.பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இழுபறி நிலை சிலருக்கு ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஏப்ரல் 21
பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு
கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை. கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப்ரல் 21,22
பரிகாரம்: பைரவர் வழிபாடு
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
வேலை செய்பவர்களுக்கு திடீர் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.பெண்களுக்கு கடன் விடயத்தில் கவனம் தேவை.திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர். மறுவிவாக முயற்சி பலிக்கும்.புத்திர பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்திருமண முயற்சிகளில் கவனம் தேவை. இந்த வாரத்தில் அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 24,25,26
பரிகாரம்: ராஜராஜேஸ்வரி வழிபாடு
ஜோதிடரின் சிறப்பான கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்
புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்
நினைத்த காரியங்கங்கள் வெற்றி பெறும். செய்யும் செயல் உங்களுக்குச் சாதகமான பலனைத் தரும். எதிலும் ஊக்கமோடு செயல்படுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புண்டு. அலுவலகத்தில் உங்கள் சொல் செயல் இரண்டும் பாராட்டப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பெண்களுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.தம்பதிகள் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.
மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
புதிய வாய்ப்புகளை தருகின்ற வாரம். வேலை தேடுவோருக்கு வேலை சிலருக்கு கிடைக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு
மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்
உத்யோகத்தில் இருந்த தொல்லைகள் விலகும். வீட்டிலே அமைதியான சூழல் ஏற்படும். பெண்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வியை படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி நன்மையை தரும். கடன் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வழி கிடைக்கும். சுற்றுலா செல்ல சிலருக்கு வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை. கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: கெளரி அம்பாள் வழிபாடு
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.ராகுவால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலம் உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம்: லஷ்மி நாராயணர் வழிபாடு
4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : +919941387054, +916380820592 . மின்னஞ்சல் முகவரி: