பன்னிரு இராசிகளுக்குமான வார ( மார்ச் 17 முதல் மார்ச் 23 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
வேலை செய்பவர்களுக்கு திடீர் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.பெண்களுக்கு கடன் விடயத்தில் கவனம் தேவை.திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர். மறுவிவாக முயற்சி பலிக்கும்.புத்திர பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்திருமண முயற்சிகளில் கவனம் தேவை. இந்த வாரத்தில் அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 19,20,21
பரிகாரம்: ராஜராஜேஸ்வரி அம்பாள் வழிபாடு
இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. செலவு அதிகரிக்கவே செய்யும்.அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தந்தை மகன் உறவுகள் சற்று பாதிக்கவே செய்யும்.புதிய யுக்திகள் மூலமாக வியாபாரத்தில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்வீர்கள். திருமணத்திற்கு சம்மதம் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்ட மங்கள நிகழ்ச்சி ஏதோ ஒரு காரணத்தால் தடைபடலாம். வியாபாரத்தில் சொல்லி அடிப்பீர்கள். பழைய கடன்கள் மள மள என்று வசூல் ஆகும். சிறு வியாபாரிகள் அபிரிமிதமான லாபத்தை பார்ப்பார்கள். அலங்கார பொருள் விற்பனை அமோக பலனை கொண்டு வரும். மாணவர்களுக்கு அற்புதமான வாரம்.வெளிநாட்டு தொடர்பு அதிகரிக்கும்.பெண்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
சந்திராஷ்டமம்: மார்ச் 21,22,23
பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு
மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உதவி சிலருக்கு கிடைக்கும். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தை செல்வங்களுக்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். வாகனங்களால் திடீர் செலவு உண்டு. வியாபாரத்தில் மந்த நிலைமை மாறும். சிலருக்கு திடீர் பண வரவு உண்டு. சொத்து வாங்க எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மன குழப்பங்கள் நீங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு
கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
உறவினர்கள் மூலம் நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளைப் பற்றி இருந்து வந்த மனக்கவலை நீங்கும். வாரப் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பழைய கடன்களில் ஒரு பகுதியைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற் படும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் கூடுதல் செலவும் ஏற்படும். வியாபாரத்தில் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும்.உங்கள் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு
ஜோதிடரின் சிறப்பான கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்
வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். நினைத்ததை சாதித்து முடிப்பீர். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட சிக்கல் முடிவிற்கு வரும். பார்த்து வரும் வேலையில் உயர்வு உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும்.மாணவர்களுக்கு உற்சாகமான வாரம்.தம்பதிகள் இடையே மகிழ்ச்சியான வாரம்.
பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்
திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி இடையே சந்தோசம் அதிகரிக்கும். மாணவர்கள் பரீட்சைகளிலே நல்ல பெறுபேறுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். பெண்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களோடு சந்தைப்படுத்தல் மூலம் நல்ல இலாபத்தை பெற முடியும். உறவுகள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் உண்டு. சகோதர சகோதரியின் ஆரோக்கியம் மேம்படும். விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
பரிகாரம்: லஷ்மி நரசிம்மர் வழிபாடு
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
மனதில் இருந்து வந்த குழப்பம் படிப்படியாக நீங்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை பல விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தொழில் துறையினர் புதிய இயந்திரங்களை அமைத்து உற்பத்தியை பெருக்கும் சூழல் அமைந்துள்ளது.மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம். சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.தந்தை மகன் உறவுகளில் சிக்கல்கள் வரலாம் தேவையில்லாத கோபதாபங்கள் ஏற்படலாம் என்பதால் வாதப் பிரதிவாதங்களைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: தெட்சிணாமூர்த்தி வழிபாடு
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.ராகுவால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலம் உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம்: காளியம்மன் வழிபாடு
மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை. கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்
வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத் தேடியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும்.பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்.மாணவர்களுக்கு கவனமாக படிக்க வேண்டிய வாரம். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு விசா நீட்டிப்பு தாமதமாகும். செயல்படுவது நல்லது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாகப் படித்துப் பார்ப்பது அவசியம். அரசுவழி முயற்சி சாதகமாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும்.அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 17,18,19
4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: