free website hit counter

ஜூன் 07 வரை பயணக்கட்டுப்பாடு தளர்வுகள் இன்றி தொடரும்; இராணுவத் தளபதி அறிவிப்பு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுத் தடுப்பு தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கொரோனா தொற்றுத் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04 ஆம் திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இணைந்திருங்கள்...!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction