free website hit counter

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு; துமிந்த சில்வாவும் விடுதலை!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார். 

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் உள்ளிட்ட 93 பேர் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction