free website hit counter

காகத்தைக் கொன்று இறக்கையைத் தொங்கவிட்டால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அமைதியாவார்கள்: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காகமொன்றை கொன்று, அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும்.” என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். 

குருநாகலில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசாங்கமும் ஜனாதிபதியும் அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதே பிரச்சினையாக உள்ளது,நீ ங்கள் ஒரு காகத்தை கொண்டு அதன் இறக்கையை அனைவரும் பார்க்கும் விதத்தில் தொங்கவிடுங்கள்-அனைத்தும் சுத்தமாகிவிடும்.” என்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction