free website hit counter

தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் இறப்பர் முத்திரைகளே: தயாசிறி ஜயசேகர

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரும் இறப்பர் முத்திரைகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

குருநாகல், கல்கமுவ பகுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை இனங்காணாது அமைச்சுப் பொறுப்புகளை பிரித்து கொண்டுப்பதன் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது.

பாராளுமன்றத்துக்கு யார் வந்தாலும், யாருக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் பிரச்சினை அவ்வாறே இருக்கும். அமைச்சர்களை விடவும் ஆகக் கூடுதலான அதிகாரங்களை கொண்டிருந்த தலைவராகவே பஷில் ராஜபக்ஷ இருந்தார்.” என்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction