free website hit counter

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்துக்கு மீண்டும் தடை!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதை அறிவித்துள்ளார்.

இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்தினுள் ரயில்கள் நுழைந்து வெளியேறுதல் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலுக்கமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction