free website hit counter

இத்தாலியில் கோவிட் -19 நடவடிக்கைகளின் விரிவாக்கத்திற்கு எதிராக வெடித்த பாரிய ஆர்ப்பாட்டங்கள் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியில் நேற்று சனிக்கிழமை பாரிய அளவிலான எதிர்புப் போராட்டங்கள் வெடித்தன. தலைநகர் ரோமின் ரோமின் பியாற்ஸா டெல் போபோலோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், பிரதமர் டிராகி, மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பிக் கூச்சலிட்டனர்.

கோவிட் -19 கிறீன் பாஸ் தேவையை அனைத்து பணியிடங்களுக்கும் நீட்டிக்கும் இத்தாலிய பிரதமரின் முடிவுக்கு எதிராக, கோவிட் -19 சுகாதார பாஸ் அமைப்பை அனைத்து பணியிடங்களுக்கும் நீட்டிப்பதற்கு எதிராக தீவிர வலதுசாரி குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர் விமர்சனம்

எதிர்ப்பு அணிவகுப்புக்கு காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், பல நூற்றுக்கணக்கான மக்கள் பிரதான நெடுவரிசையை விட்டு வெளியேறி, பாராளுமன்றத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். தீவிர வலதுசாரி குழுவின் உறுப்பினர்களான ஃபோர்ஸா நுவா, இத்தாலிய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பான CGIL இன் தலைமையகத்தைத் தாக்கி ஆக்கிரமித்தனர்.

போராட்டத்தில் ஈடுப்ட்டவர்களைத் தடுக்க காவல்துறையினர் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் செய்தனர். மோதல்களின் போது பல போராட்டக்காரர்களை கைது செய்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு குழு பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இத்தாலிய கலகக் காவல்துறை எதிர்ப்பாளர்களைச் சூழ்ந்து கொண்டு கட்டுப்படுத்தியது.

பிரதமர் மரியோ டிராகியின் அலுவலகம் "பல்வேறு இத்தாலிய நகரங்களில் நேற்று நடந்த வன்முறையை" கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அரசாங்கம் "கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பிரச்சாரத்தை முடிக்க தனது உறுதிப்பாட்டை தொடர்கிறது" என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 15 முதல் அனைத்து வேலை இடங்களுக்கும் பசுமை பாஸ் திட்டம் நீட்டிக்கப்படும் என்று மூன்று வாரங்களுக்கு முன்பு அரசாங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction