free website hit counter

சித்தார்த்தின் கண்கள் சக்தி வாய்ந்தவை! மனம் திறந்த பார்வதி

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பார்வதி திருவோத்து என்பதை விட ‘பூ’ பார்வதி என்றால் நன்கு தெரியும். தமிழ்.

மலையாளம், தமிழ் படங்களில் பலவிதக் கதாபாத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை குவிப்பவர். விரைவில் வெளியாகவுள்ள நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘இன்மை’ என்ற குறும்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுபற்றி பார்வதி நம்மிடம் கூறும்போது:

“நடிகர் சித்தார்த்தின் கண்கள் சக்தி வாய்ந்தவை. அவர் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். படப்பிடிப்பில் இது, எனக்கு நடிப்பில் மிகப்பெரும் உதவியாக இருந்தது அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. சித்தார்த்தும் நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் இணையம் வழியாக சிலமுறை பேசி, இப்படம் குறித்து ரிகர்சல் செய்துகொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்களுமின்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நிகழ்ந்தேறியது. முன்னணி கலைஞர்கள் பங்குபெற, அத்தனை பேரின் அர்ப்பணிப்பில், வெகு இயல்பாக, ஒரு படைப்பு உருவாகியுள்ளது. படத்தின் தலையெழுத்து இனி ரசிகர்கள் கையில்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction