இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது.
அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுகளை பெற்று வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப் பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை தனது ராஜ்கமல் நிறுவனத்துக்கு அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா.இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பகலைஞர்களுக்கும் உலக நாயகனின் வாழ்த்து பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள் குழுவினர். சந்திப்பின்போது கமல் பேசிய விவரங்களைப் பின்னர் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் கமல். ஆர்யாவிடம் தமிழ் வசன உச்சரிப்பை இன்னும் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளதாக கமல் கூறியிருக்கிறார்.