விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது முதல் படம் 'சகாப்தம்'. பின்னர் 'மதுரை வீரன்' படத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது 'படைத்தலைவன்' படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கும் ‘படைத்தலைவன்’ படத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர்.
டிராக்டர்ஸ் சினிமாஸ் தயாரித்த இந்தப் படத்தை இயக்குனர் அன்பு இயக்கியுள்ளார். மேலும், இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். கஸ்தூரி ராஜா, எம்.எஸ். பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திருப்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
படம் 13 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரமலதா விஜயகாந்த், தலைவன் படம் பற்றிப் பேசினார். அதாவது, 'படைத்தலைவன்' படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளோம். மேலும், அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.