free website hit counter

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்புரிமையை நீக்கியமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததையடுத்து கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக டயானா கமகே தெரிவித்துள்ளார். மனுதாரர், தான் அரசாங்கத்தின் உறுப்பினர் அல்ல, ஆனால் SJB கட்சியின் அரசியலமைப்பின்படி சுதந்திரமாகவும் தனது மனசாட்சிக்கு இணங்கவும் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறினார்.

SJB பொதுச் செயலாளர், அதன் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் பிரதிவாதிகளாக டயானா கமகே குறிப்பிட்டுள்ளார். SJB யில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கான முடிவு, SJB இன் அரசியலமைப்பை மீறும் வகையில் எடுக்கப்பட்டதாக அறிவிக்கவும் மனுதாரர் கோரியுள்ளார்.


இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction