free website hit counter

சில அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென கொள்கைகளை மாற்றுகிறார்கள்: நாமல் தமிழர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றும் அரசியல்வாதிகளை கவனத்தில் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் (TNA) தமிழ் மக்களுக்கும் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வரும் கட்சிகளையும் அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் நம்பலாம் எனவும், ஆனால் தேர்தலுக்கு சற்று முன்னர் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்பவர்கள் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அதே அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவும் இக்கட்சிகளின் இரட்டை வேடத்திற்குச் சான்றாகும் என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula