free website hit counter

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் 2 நாள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த வருடம் முதல் தனியார் வாகன இறக்குமதியை படிப்படியாக தளர்த்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாடசாலைகளில் தரம் 08 தொடக்கம் மாணவர்களுக்காக தற்போதைய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பாடத்திட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை இந்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல வகையான மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: